என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்
- கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வலியுறுத்தப்பட்டது
- லோக் ஜனசக்தி தமிழ் மாநில தலைவர் தெரிவித்தார்
திருச்சி:
லோக் ஜனசக்தி கட்சியின் தமிழ் மாநில தலைவர் வித்யாதரன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இப்போது அவர் கூறியதாவது,
இந்திய நாடாளுமன்றத்தில் 40 ஆண்டு காலம் எம்.பி.யாக, மத்திய மந்திரியாக இருந்து பல்வேறு சாதனைகள் செய்த மறைந்த சமூக நீதி காவலர் ராம் விலாஸ் பசுவானுக்கு தமிழ்நாட்டில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க தமிழக முதலமைச்சரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மாயமாக்கப்படும் சூழலில் தனியார் நிறுவனங்களில் பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டினை உறுதி செய்யாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
எல்லா மாநிலங்களிலும் உள்ள மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில ஒன்றிய அரசு கல்வியை ஒன்றிய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இதில் ஒன்றிய அரசு தமது பிடியை தளர்த்த வேண்டும் என்றார்.
பேட்டியின் போது மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியம், மாநில பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, பிரபாகரன், நம்பியார், சுந்தரவடிவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்