என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கார்த்திகை மாத இசை விழா
- கார்த்திகை மாத இசை விழா நடைபெற உள்ளது
- வருகிற 26 ம் தேதி நடக்கிறது
திருச்சி:
பாரதிய வித்யா பவன், பெங்களூரு இன்போசிஸ் பவுண்டேஷன் சார்பில் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் கார்த்திகை மாத இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
இதன் முதல் நாள் நிகழ்வாக வருகிற 26 ம் தேதி( சனிக்கிழமை )மாலை 5:30 மணிக்கு ரெங்கவிலாஸ் மண்டபத்தில் புல்லாங்குழல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் புல்லாங்குழ வித்வான் குழல் இசை மாமணி அனிருத்,வயலின் வித்துவான் ஸ்ரீரங்கம் ஜெ.ஆனந்த், மிருதங்க வித்வான் ஜெ. பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.
கார்த்திகை மாதம் தொடங்கி விட்டதால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து விட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இதைத் தொடர்ந்து ரங்கநாதர் கோவிலில் கார்த்திகை மாத இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இசை விழா வருகிற 26 ம் தேதி மற்றும் 27 ம் தேதி ஆகிய விடுமுறை தினங்களில் நடத்தப்படுகிறது. ஆகவே திரளான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்