search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் தொட்டியில் செத்து கிடந்த பன்றி குட்டி
    X

    குடிநீர் தொட்டியில் செத்து கிடந்த பன்றி குட்டி

    • திருச்சியில் குடிநீர் தொட்டியில் செத்து கிடந்த பன்றி குட்டி
    • பன்றிகுட்டி செத்து மிதப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி குமரன் நகர் முதல் தெருவில் பொது குடிநீர் குழாய் ஒன்று உள்ளது. இந்த குழாய் பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே அதில் பொதுமக்கள் இறங்கி தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக படியுடன் தொட்டி அமைத்துள்ளனர்.இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள தெருநாய்கள் ஒரு பன்றி குட்டியை விரட்டி உள்ளது. இதில் அந்தப் பன்றி குட்டி அந்த குடிநீர் தொட்டிக்குள் விழுந்தது.இதில் காயமடைந்த அந்த பன்றி குட்டியால் வெளியே வர இயலவில்லை. இதற்கிடையே அந்த குடிநீர் குழாயும் உடைந்து தொட்டியில் தண்ணீர் நிரம்பியது. இதனால் தப்பிக்க இயலாமல் பன்றி குட்டி தண்ணீரில் செத்து மிதந்தது.இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் செத்து மிதந்த பன்றியை அப்புறப்படுத்தினர்.மேலும் தொட்டியில் தேங்கிய தண்ணீரும் அகற்றப்பட்டது.இருப்பினும் தொட்டிக்குள் இருந்த குடிநீர் குழாய் உடைந்ததால் பன்றி செத்து மிதந்த அசுத்த நீர் வீடுகளுக்கு ரிவர்ஸ் ஆகி சென்றிருக்கும் என பொதுமக்கள் கூறினர். ஆகவே தரை மட்டத்தில் இருக்கும் இது போன்ற குடிநீர் தொட்டிகளை மூடி பாதுகாப்பான முறையில் மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×