என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் மாநாடு
    X

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் மாநாடு

    • திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் மாநாடு நடைபெற்றது
    • காணொளி வாயிலாக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்

    திருச்சி:

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 46-வது இந்திய சமூக அறிவியல் 5 நாள் மாநாடு இன்று தொடங்கி நடைபெறுகிறது. மாநாட்டை சென்னையில் இருந்து காணொளி மூலமாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் நிலை, சுதந்திரத்திற்கு பின்னர் இதுவரை நாட்டில் இருக்கும் சுய சார்பு நிலைகள், இனிமேல் சுயசார்பு நிலையை வளர்த்தெடுப்பதற்கான திட்டங்கள் ஆகியவற்றினை கருப்பொருளாக வைத்து வாழ்க்கை தரத்தை மதிப்பீடு செய்தல், சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம், மற்றும் பாகுபாடு, வன்முறை, அச்சம் இல்லாத மாண்புடனான வாழ்க்கை, இந்திய மக்கள் அனைவரும் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு உண்டான விவாதங்களை மைய கருப்பொருளாக கொண்டு இம்மாநாடு நடைபெற்று வருகிறது.

    இதில் கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள், ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். 75 வது ஆண்டு இந்திய சுயராஜ்யத்தின் மீதான அறிவியல் பூர்வமான எதிர்கால திட்டங்களை மையமாக வைத்து விவாதங்களும் நடக்கின்றன. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் மா. செல்வம், பதிவாளர் கணேசன், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் கம்பத்தூர் முரளிதர், கேரள மாநிலம் முன்னாள் தலைமைச் செயலாளர் விஜய்ஆனந்த், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான தங்க ஜெயராமன், ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிஅரசர் சந்துரு உட்பட பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துரைகளை வழங்கி பேசுகின்றனர். இக்கருத்தரங்கள் வழங்கப்படும் ஒவ்வொரு கருத்துக்களையும் தொகுத்து பல்வேறு துறைகளில் முன்னேற்றங்களை குறித்து அறிக்கையை அந்தந்த துறைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த மாநாட்டினை அலகாபாத் இந்திய சமூக அறிவியல் அகாடமி இணைந்து நடத்துகிறது.

    Next Story
    ×