search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணவர் கண்டித்ததால் இளம்பெண் மாயம்
    X

    கணவர் கண்டித்ததால் இளம்பெண் மாயம்

    • கணவர் கண்டித்ததால் இளம்பெண் மாயமானார்
    • இன்ஸ்டாகிராமில் வாலிபருடன் அரட்டை

    திருச்சி

    திருச்சி மாவட்டம் முசிறி மாணிக்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது 25). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அபிநயா (19) என்பவரை கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் அபிநயாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு நண்பர் அறிமுகமாகி பழக்கமானார். இருவரும் மிகவும் நெருக்கமானார்கள். நீண்ட நேரம் அவரிடம் அபிநயா அரட்டை அடித்து வந்தார். இதனை அறிந்த ஸ்ரீதரன் மனைவியை கண்டித்தார். இந்த நிலையில் பால் வாங்குவதாக வெளியே புறப்பட்டு சென்ற அபிநயா திடீரென்று மாயமாகி விட்டார்.

    இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபருடன் அவர் ஓட்டம் பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக ஸ்ரீதரன் முசிறி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×