search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    இளம்பெண் தீக்காயங்களுடன் சந்தேக மரணம்
    X

    இளம்பெண் தீக்காயங்களுடன் சந்தேக மரணம்

    • இரண்டு மாதத்திற்கு முன் காதல் திருமணம் ெசய்து கொண்டவர் சாவு
    • சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை

    திருச்சி,

    திருச்சி காம நெய்க்கண்பாளையம் அண்ணாவியார் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனியப்பன். இவரின் மகள் சுஜித்ரா(வயது 21), உக்கரையை சேர்ந்த பெரியசாமி என்பவரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் காதல் கணவரும், மாமியாரும் கொடுமை செய்வதாக கூறியதால் பழனியப்பன் தனது மகள் சுஜித்ராவை தனது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். இந்நிலையில் பழனியப்பன் , அவரது மனைவியும் வேலைக்கு சென்றுள்ளனர். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது சுஜித்ரா உடலில் தீக்காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த இருவரும் இது குறித்து பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உடலை கைப்பற்றிய போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து உள்ளனர். திருமணமாகி இரண்டே மாதங்களில் சம்பவம் நடைபெற்று உள்ளதால், இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×