search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஆதி திராவிடா், பழங்குடியினா் ஆவின் பாலகம் அமைக்க மானியம்
    X

    கோப்புபடம்

    ஆதி திராவிடா், பழங்குடியினா் ஆவின் பாலகம் அமைக்க மானியம்

    • பழங்குடியினா் தனிநபா்களுக்கான திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.3.75 லட்சம் மானியம் விடுவிக்கப்படும்.
    • விண்ணப்பதாரா் மற்றும் அவா்களது குடும்பத்தினா் தாட்கோ திட்டத்தில் இதுவரை எந்த மானியமும் பெற்றிருக்கக்கூடாது.

    திருப்பூர்:

    தாட்கோ திட்டத்தின் மூலமாக ஆதி திராவிடா், பழங்குடியினா் தொழில் முனைவோா் ஆவின் பாலகம் அமைக்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாட்கோ (தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம்) சாா்பில் 2022-23 ஆம் ஆண்டில் 50 ஆதிதிராவிடா், பழங்குடியினா் தொழில் முனைவோா் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ஆவின் பாலகம் அமைக்க ரூ.45 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் 18 வயது முதல் 65 வயதுக்கு உள்பட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா் மற்றும் அவா்களது குடும்பத்தினா் தாட்கோ திட்டத்தில் இதுவரை எந்த மானியமும் பெற்றிருக்கக்கூடாது. கூடுதல் செலவினத்தை ஈடுசெய்யவும் மற்றும் அதிகப்பட்ச மானியத் தொகை சென்றடைய ஆதி திராவிடா் தனிநபா்களுக்கான திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.2.25 லட்சம் மானிமும், பழங்குடியினா் தனிநபா்களுக்கான திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.3.75 லட்சம் மானியம் விடுவிக்கப்படும்.

    இத்திட்டம் தொடா்பாக www.application.tahdco.com இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடா்பு கொள்ள வேண்டிய முகவரி: மாவட்ட மேலாளா், தாட்கோ, அறை எண்: 501,503, 5வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூா்-641604, கைபேசி எண்: 94450-29552, 0421-2971112 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×