search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோத்தகிரியில் பாதுகாப்பற்ற முறையில் கட்டுமான பணி- மண்சரிவு ஏற்பட்டதால் திரண்ட பொதுமக்கள்
    X

    கோத்தகிரியில் பாதுகாப்பற்ற முறையில் கட்டுமான பணி- மண்சரிவு ஏற்பட்டதால் திரண்ட பொதுமக்கள்

    • குடியிருப்புகளும் சரியும் நிலையில் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
    • தாசில்தார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் விரைந்து வந்து, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அம்மன் நகரில் சாலையோரத்தில் கட்டுமான பணி நடந்து வந்தது. அவர்கள் அங்கேயே தகர சீட்டு அமைத்து இந்த பணியை மேற்கொண்டு வந்தனர். இதற்கு முறையான அனுமதி பெறவில்லை எனவும் தெரிகிறது.

    நேற்று கோத்தகிரி பகுதியில் மழை பெய்தது. அப்போது இந்த பகுதியில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. மண் சரிந்து அந்த பகுதிக்கு செல்லக்கூடிய சாைல முழுவதுமாக மறைந்து விட்டது. இதனால் மக்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் தவித்தனர். மேலும் அங்குள்ள குடியிருப்புகளும் சரியும் நிலையில் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

    இதையடுத்து பொதுமக்கள் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த தாசில்தார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் விரைந்து வந்து, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    Next Story
    ×