என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
சீர்காழி அருகே வீர நரசிம்ம பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
- மிக பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தில் நரசிம்மரை வழிபட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினால் கிரக தோஷங்கள், திருமண த்தடை நீங்கி, திருமணம் நடைபெறுவது நிச்சயம் என புராணவரலாறுகள் கூறுகின்றன.
- பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோயிலின் திருப்பணிகள் உபயதாரர்களால்நடை பெற்று முடிந்துமகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் பஞ்ச (ஜந்து) நரசிம்மர்கோயில்கள் அமைந்துள்ளனஇந்த கோயில்களில் இரண்டா வது ஸ்தலமாக விளங்கு வது மங்கைமடம் வீரநரசிம்மர்கோயில் ஆகும்.முன்னொரு காலத்தில் திருமங்கை ஆழ்வார் குமுதவல்லி நாச்சியாரை மணம்புரிய 1008 வைஷ்ணவ அடியார்களுக்கு ஒரு வருடகாலத்திற்கு அன்ன தானம் வழங்கியதாகவும், மேலும் திருமங்கைஆழ்வார் வீரநரசிம்மரை வணங்கியும், ஆராதித்து பல பாடல்கள் பாடியுள்ளார்.
மிக பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தில் நரசிம்மரை வழிபட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினால் கிரக தோஷங்கள், திருமண த்தடை நீங்கி, திருமணம் நடைபெறுவது நிச்சயம் என புராணவரலாறுகள் கூறுகின்றன.
பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோயிலின் திருப்பணிகள் உபயதாரர்களால்நடை பெற்று முடிந்துமகா கும்பாபிஷேகம் நடைபெ ற்றது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை காலை யாக சாலை பூஜைகள் தொடங்கின.
தொடர்ந்து விழா அன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து புனித நீர் அடங்கிய கடன்கள் மேல தாளங்களுடன் புறப்பட்டு கோவிலை வந்து மூல விமான கழகத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் பல்லாயிர க்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி முருகன், கோயில் பூஜகர் பாலாஜி பட்டாச்சாரியார், ஸ்தலத்தார் நாங்கூர் நாராயண அய்யங்கார் மற்றும் விழா குழுவினர் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்