என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் குடிபோதையில் பெண்ணிடம் பேசிய காய்கறி வியாபாரிக்கு கத்திக்குத்து
- முஜூபூர் ரகுமான் காய்கறி வியாபாரியாக இருந்து வருகிறார்
- முஜூபூர் ரகுமான் குடிபோதயைில், பாபுவின் தங்கையிடம் பேச அவரது வீட்டு சென்றார்.
கோவை,
கோவை தெற்கு உக்கடம் புல்லுகாடு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் முஜூபூர் ரகுமான் (வயது 42). காய்கறி வியாபாரி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பாபு என்கிற முகமது (36). ஆட்டோ டிரைவர்.
இந்த நிலையில் முஜூபூர் ரகுமான் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார். 2-வதாக அவர் பாபுவின் சகோதரியை திருமணம் செய்ய முடிவு செய்து அவரிடம் பேசி வந்தார்.
சம்பவத்தன்று முஜூபூர் ரகுமான் குடிபோதயைில், பாபுவின் தங்கையிடம் பேச அவரது வீட்டு சென்றார். அப்போது வீட்டில் இருந்த பாபு அவரிடம் அங்கிருந்து செல்லுமாறு கூறினார். ஆனால் அவர் அங்கிருந்து செல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாபு அவரை சரமாரியாக தாக்கினார். இதனை பார்த்த பாபுவின் நண்பர் முகமது ரபிக் என்பவர் அங்கு வந்தார்.
அவரும் முஜூபூர் ரகுமானை தாக்கி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தினார். பலத்த காயம் அடைந்த அவர் வலியால் அலறி துடித்தார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து முகமது ரபிக் அங்கிருந்து தப்பி சென்றார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் முஜூபூர் ரகுமானை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து முஜூபூர் ரகுமான் பெரிய கடை வீதி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர்.
அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தப்பி ஓடிய முகமது ரபிக் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முகமது ரபிக் மீது பெரிய கடை வீதி, போத்தனூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்