என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![காட்பாடி ரெயில் நிலையத்தில் எக்ஸ்லேட்டர் 10 நாட்களுக்கு மேலாக பழுது காட்பாடி ரெயில் நிலையத்தில் எக்ஸ்லேட்டர் 10 நாட்களுக்கு மேலாக பழுது](https://media.maalaimalar.com/h-upload/2023/02/14/1836113-katadi-railway.webp)
காட்பாடி ரெயில் நிலையத்தில் எக்ஸ்லேட்டர் 10 நாட்களுக்கு மேலாக பழுது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பயணிகள் அவதி
- உதிரி பாகம் வருவதில் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தகவல்
வேலூர்:
காட்பாடி ரெயில் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த பழமையான ரெயில் நிலையத்தின் வழியாக தினமும் சுமார் 120 ரெயில்கள் சென்னை மார்க்கமாகவும், ஜோலார்பேட்டை மார்க்கமாகவும், திருப்பதி மார்க்கமாகவும், வேலூர் மார்க்கமாகவும் இயக்கப்பட்டு வருகின்றன.
தினமும் சுமார் 30 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகத்தில் உள்ள மிக முக்கிய ரெயில்வே சந்திப்புகளில் காட்பாடி ரெயில் நிலையமும் ஒன்று. இங்கு 5 பிளாட்பாரங்கள் உள்ளன.
இதில் பயணிகள் எளிதில் சென்று வர வசதியாக எக்ஸ்லேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலைய நுழைவு வாயில் மற்றும் 2-வது பிளாட்பாரத்திலும் எக்ஸ்லேட்டர் ( நகரும் படிக்கட்டுகள்) ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே அமைந்துள்ள எக்ஸ்லேட்டர் பழுதடைந்துள்ளது.
இதனால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுடன் அதிக பைகள் எடுத்துச் செல்லும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். உடனடியாக அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்
எக்ஸ்லேட்டர் பழுது பார்க்கும் பணி நடந்து வருகிறது. அதற்கான உதிரி பாகம் வெளியூரில் இருந்து வர உள்ளதால் தாமதம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.