search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைலாயநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
    X

    சிறப்பு அலங்காரத்தில் கைலாயநாதர்.

    கைலாயநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

    • சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    அணைக்கட்டு:

    பாக்கம் கைலாயநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. அணைக்கட்டு அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் கோவில் உள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.

    இதில் சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர், சாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×