என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆதார் எடுக்க சிறப்பு முகாம்
- வேலூர் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது
- கலெக்டர் அறிவிப்பு
வேலூர்:
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் அனைத்து தாலுகா அலுவலகங்களில் செயல்பட்டு வரும் அனைத்து நிரந்தர ஆதார் சேவை மையங்களில் 10 சதவீதம் சுழற்சி முறையில் ஆதார் சேவை விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி அணைக்கட்டில் இந்தமாதம் 9-ந் தேதி அடுத்த மாதம் 6-ந் தேதி, டிசம்பர் மாதம் 4-ந் தேதியும், குடியாத்தத்தில் இந்த மாதம் 16-ந் தேதி, அடுத்த மாதம் 13-ந் தேதி, டிசம்பர் மாதம் 11-ந் தேதியும், பேரணாம்பட்டில் இந்த மாதம் 23-ந் தேதி, அடுத்த மாதம் 11-ந் தேதி, டிசம்பர் மாதம் 18-ந் தேதியும், வேலூர் மற்றும் காட்பாடியில் இந்த மாதம் 30-ந் தேதி, அடுத்த மாதம் 27-ந் தேதி, டிசம்பர் மாதம் 25 -ந் தேதி ஆதார் சிறப்பு முகாம் நடைபெறும்.
இதனை பொதுமக்கள் பயன்படுத்தி ஆதார் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.






