search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பாளையில் துணிகரம்:  தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் கொள்ளை
    X

    பாளையில் துணிகரம்: தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் கொள்ளை

    • பாளை ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
    • சில நாட்களுக்கு முன்பு இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார்.

    நெல்லை:

    பாளை ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 54). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றி ருந்தார்.

    இந்நிலையில் அவர்கள் இன்று காலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கிருஷ்ண மூர்த்தி உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டில் இருந்த டி.வி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள் ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி பாளை பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு குற்றப்பிரிவு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் இது தொடர் பாக வழக்குப்பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×