search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தமிழக வெற்றிக் கழக மாநாடு: புஸ்சி ஆனந்த் தலைமையில் பந்தக்கால் நடப்பட்டது
    X

    தமிழக வெற்றிக் கழக மாநாடு: புஸ்சி ஆனந்த் தலைமையில் பந்தக்கால் நடப்பட்டது

    • தமிழக வெற்றிக் கழக மாநாடு 27-ந்தேதி நடைபெறுகிறது.
    • பந்தல் அமைக்கும் பணி இன்று முதல் நடைபெற இருக்கிறது.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் இம்மாதம் 27-ந்தேதி நடைபெறுகிறது.

    மாநாட்டுக்கான வேலைகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மாநாட்டுக்காக பிரமாண்ட பந்தல் போடப்பட இருக்கிறது. இதற்கான பந்தல் கால் நடும் விழா இன்று காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் மாநில செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் கட்சியினர் மாநாட்டு திடலில் பூமி பூஜையை செய்தனர். பின்னர் மாநாட்டுக்கான பந்தக்கால் நடப்பட்டது.

    பந்தக்கால் நட்பபட்ட போது தளபதி, தளபதி என கட்சி நிர்வாகிகள் முழக்கமிட்டனர். பந்தக்கால் நடப்பட்ட விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தின் முக்கிய கோவில்கள், தேவாலயம், மசூதி ஆகிவற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இதில் த.வெ.க. கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    பூமி பூஜை மற்றும்டி பந்தக்கால் நடும் விழாவிற்கு வந்தவர்களுக்கு இட்லி, பொங்கல், பூரி, வடை ஆகியவை காலை உணவாக வழங்கப்பட்டது.

    மாநாடு நடைபெறும் இடத்திற்கு புஸ்சி ஆனந்த் வந்ததும், அவருக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது.

    Next Story
    ×