search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்னக ரெயில்வேயின் பொது மேலாளரை சந்தித்த விஜய் வசந்த் எம்.பி.
    X

    தென்னக ரெயில்வேயின் பொது மேலாளரை சந்தித்த விஜய் வசந்த் எம்.பி.

    • விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
    • ஜல்லி கிடங்கை நடைமேடையில் இருந்து சற்று தூரம் தள்ளி அமைக்க வேண்டும்.

    இடைக்கோடு, தேவிகோடு மற்றும் புலியூர்சாலை ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு நன்றி கூறி அவர்கள் அன்பை ஏற்று வாங்கினோம். மேலும் அவர்கள் தெரிவித்த குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய உறுதி அளித்தோம்.


    அன்னை இந்திரா காந்தி அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மேல்புறம் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு நன்றி கூறும் பயணத்தை ஆரம்பித்தோம்.

    விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி சொல்ல வருகிறோம்.

    தென்னக ரெயில்வேயின் பொது மேலாளர் ஆர். என். சிங் அவர்களை சென்னையில் சந்தித்து இரணியல் ரெயில் நிலையத்தை ஒட்டி ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருக்கும் ஜல்லி கிடங்கை மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.


    தற்போது திட்டமிட்டிருக்கும் ஜல்லி கிடங்கு நடைமேடைக்கு மிக அருகில் இருப்பதால் அங்கிருந்து கிளம்பும் தூசு மற்றும் மாசு பொருட்கள் பொதுமக்களுக்கு தீங்கை ஏற்படுத்தும் என தெரிவித்தேன்.

    இந்த ஜல்லி கிடங்கை நடைமேடையில் இருந்து சற்று தூரம் தள்ளி அமைக்க வேண்டும் எனவும்,

    இந்த பிரச்சனைக்கு சமூக தீர்வு காண்பதற்காக ரெயில்வே துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆய்வு செய்வதற்கு அனுப்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டேன்.

    Next Story
    ×