search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருந்தலைவர் பிறந்தநாள் நிகழ்ச்சி நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய்வசந்த்
    X

    பெருந்தலைவர் பிறந்தநாள் நிகழ்ச்சி நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய்வசந்த்

    • பெருந்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தெரிவித்த வாழ்த்தினை ஏற்று வாங்கினேன்.

    பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது

    திங்கள் நகரில் நடைபெற்ற பெருந்தலைவர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருந்தலைவருக்கு அஞ்சலி செலுத்தினேன்.


    திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் திரு. சுமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் திரு. கே.டி.உதயம், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ராஜேஷ் குமார், திரு. பிரின்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் திரு. லாரன்ஸ், திரு யூசுஃப் கான், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு டைசன் ,மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி திருமதி வதன நிஷா, மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


    இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தெரிவித்த வாழ்த்தினை ஏற்று வாங்கினேன்.

    பெருந்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×