என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புவனகிரி அருகே திருநங்கைகள் கோவில் கட்ட கிராம மக்கள் எதிர்ப்பு
- 5 செட் இடம் வாங்கி அதில் பிரத்தியங்கராதேவி கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
- படுகாயம் அடைந்த திருநங்கை வாசுகி புவனகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவன கிரி அருகே பு.மணவெளி கிராமத்தை சேர்ந்தவர் வாசுகி, திருநங்கையான இவர் அந்த பகுதியில் 5 செட் இடம் வாங்கி அதில் பிரத்தியங்கராதேவி கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு பூஜை நடத்தி னார். இதனை அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த கருணாகரன், சிவகுரு நாதன், கங்கா, சீராலன், முரளி, குமார் உள்ளிட்ட 7 பேர் அங்கு வந்தனர். அப்போது அவர்கள் திரு நங்கையிடம் இந்த பகுதி யில் கோவில் கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த னர். இதனால் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் திருநங்கை வாசுகி தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த திருநங்கை வாசுகி புவனகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனை அறிந்த ஏராளமான திருநங்கைகள் திரண்டனர். அவர்கள் புவனகிரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். திருநங்கை வாசுகியை தாக்கியவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசம் அடைந்த னர். இது தொடர்பாக போலீ சார் திருநங்கைகளிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதுதொடர்பாக கருணா கரன், சிவகுருநாதன், கங்கா உள்பட 7 பேர் மீது போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை எற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்