என் மலர்
உள்ளூர் செய்திகள்

19,122 மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.35.67 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு
- 19,122 மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.35.67 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
- மேற்கண்ட விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் 2022-23 கொள்முதல் பருவத்தில், இதுவரை 19 ஆயிரத்து122 மெட்ரிக்டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதலுக்கான தொகை ரூ.35.67 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,537 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக புகார்கள் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர், இலவச அலைபேசி எண். 1077 துணை ஆட்சியர் / மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் விருதுநகர் தொலைபேசி எண். 04562-252607 ஆகிய எண்ணிற்கு புகார் செய்யலாம் என்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Next Story






