search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடுத்தடுத்து நடந்த விபத்தில் 3 பேர் படுகாயம்
    X

    அடுத்தடுத்து நடந்த விபத்தில் 3 பேர் படுகாயம்

    • ராஜபாளையத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • மின்கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் தென்காசி நெடுஞ்சாலை யில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையம் உள்ளது. இந்தநிலையில் இன்று காலை தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரம் பகுதியில் இருந்து தேனிக்கு நுங்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு பிக்கப் வாகனம் சென்றது.

    அப்போது எதிரே டிராக்டர் வந்த தால் மோதாமல் இருப்பதற்காக டிரைவர் மணிகண்டன் வாகனத்தை திருப்பி யுள்ளார். அப்போது வாகனம் ரோட்டில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் மணி கண்டன், அவருடன் வந்த முருகன், மனோஜ் ஆகிய 3 பேரும் படுகாய மடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ராஜபாளையம் தெற்கு போலீசார் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய வர்களை மீட்டு விசாரணை நடத்தினர்.

    இந்த நேரத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தேங்காய்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் புனலூர் நோக்கி ஒரு ஈச்சர் லாரி சென்றது. அந்த லாரி டிரைவர் ரோட்டில் கவிழ்ந்து கிடக்கும் வாகனத்தை பார்த்துக் கொண்டே சென்றதால் ஈச்சர் லாரி நிலைதடுமாறி அதே பகுதியில் உள்ள மின் கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் உயர்ரக மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனை மீட்பு பணியில் இருந்த போலீசார் கண்டு விலகி சென்றதால் உயிர் தப்பினர். அடுத்தடுத்து வாகன விபத்து ஏற்பட்டதால் ராஜபாளையத்தில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×