search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 பெண்கள்-தொழிலாளி மாயம்
    X

    3 பெண்கள்-தொழிலாளி மாயம்

    • 3 பெண்கள்-தொழிலாளி மாயமானார்கள்.
    • டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள பேராநாயக்கன்பட்டி அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் துரைபாண்டி. இவரது மகள் மகாலட்சுமி (வயது19). பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்த இவர் திடீரென மாயமானார். சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் பவித்ரமூர்த்தி (28). கட்டிட தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானார். இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    திருச்சுழி அருகே உள்ள ஒட்டன் குளத்தை சேர்ந்தவர் வினோத் (32). இவரது மனைவி கவுசல்யா (20). இவர் அடிக்கடி செல்போனில் பேசினார். இதனை கணவர் கண்டித்தால் சம்பவத்தன்று கவுசல்யா மாயமானார். இதுகுறித்து வீரசோழன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி பூங்கொடி (24). சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×