search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசாரிடம் ரகளை செய்தவர் மீது வழக்கு
    X

    போலீசாரிடம் ரகளை செய்தவர் மீது வழக்கு

    • போலீசாரிடம் ரகளை செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • பெரியமுத்துவை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    காரியாபட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் மற்றும் போலீசார் திருச்சி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மல்லாங்கிணறு முடியனூரைச் சேர்ந்த பெரிய முத்து என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்தார். போலீசார் அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் போலீசாரை அவதூறாக பேச தொடங்கினார். மேலும் போலீசாரை வாகன சோதனை செய்யவிடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். அவரது இருசக்கர வாகனத்தில் இருந்த சாக்கு பையை போலீசார் சோதனையிட முயன்றனர்.

    அப்போது அந்த சாக்கு பையை கீழே போட்டுவிட்டு அவர் தப்பி ஓடி விட்டார். அந்த சாக்கு பையில் 27 மது பாட்டில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியமுத்துவை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×