என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு](https://media.maalaimalar.com/h-upload/2023/02/18/1837768-1.webp)
ராஜபாளையம் பழைய பஸ் நிலையத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ராஜபாளையத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
- சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, பொறியாளர் ரத்தினவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி தென்றல் நகரில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.5.57 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் நாற்றாங்கால் நர்சரி பண்ணையை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் விதம், விநியோகிக்கப்படும் முறைகள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார்.
தென்றல் நகரில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் ரூ.1.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கிடைமட்ட உறிஞ்சி குழியி னையும், திருவள்ளுவர் நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.4 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள மிதிவண்டி நிறுத்த கூடத்தையும், மருதுநகரில் பிரதமரின் ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 1.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், ஒப்படைக்கப்பட்ட ஒட்டுமொத்த வருவாய் திட்டத்தின் கீழ், ரூ.3.95 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ராஜபாளையம் நகராட்சி பழைய பஸ் நிலையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழைய பஸ் நிலையம் முழுவதுமாக இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படும் பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்து இந்த பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, பொறியாளர் ரத்தினவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.