search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாசு திரி பறிமுதல்-4 பேர் கைது
    X

    பட்டாசு திரி பறிமுதல்-4 பேர் கைது

    • அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 158 குரோஸ் பட்டாசு திரி பறிமுதல்; 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள இ.மீனாட்சிபுரம் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பாலுசாமி(54) என்பவரது வீட்டில் 38 குரோஸ் பட்டாசு திரிகளும், பாலசுப்பிரிமணியின்(45) வீட்டில் 40 குரோஸ் பட்டாசு திரிகளும், காளிராஜ்(48) வீட்டில் 42 குரோஸ் பட்டாசு திரிகளும், சரவணன்(56) வீட்டில் 38 குரோஸ் பட்டாசு திரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. ேபாலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×