search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவர் திடீர் சாவு
    X

    கல்லூரி மாணவர் திடீர் சாவு

    • கல்லூரி மாணவர் திடீரென மரணமடைந்தார்.
    • கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா பாட்டக்குளத்தைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் மெல்வின் கிறிஸ்டோபர்(வயது19). சிவகாசியில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்தநிலையில் 1½ மாதங்களுக்கு முன்பு பேண்ட் கிழிந்த நிலையில் மெல்வின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஜோசப் அது குறித்து விசாரித்தபோது, கல்லூரியில் மயங்கி விழுந்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்தபோது மெல்வின் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஜோசப் கொடுத்த புகாரின் பேரின் கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×