search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் போக்சோவில் கைது
    X

    வாலிபர் போக்சோவில் கைது

    • மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    விருதுநகர்

    சாத்தூரை சேர்ந்தவர் பிளஸ்-2 மாணவி. இவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். பின்னர் அருகில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்துள்ளார். அப்போது சாத்தூர் ஆண்டாள்புரம் பகுதியை சேர்ந்த கார்த்தி (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் அடிக்கடி மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.

    இந்த நிலையில் அடிக்கடி வாந்தி எடுத்ததால் பெற்றோர் மருத்துவமனை அழைத்து சென்றனர். அங்கு அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து மாணவியின் தாயார் அளித்த புகாரின்பேரில் சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை போக்சோவில் கைது செய்தனர்.

    இதேபோல் வ.புதுபட்டியை சேர்ந்தவர் 16 வயது பிளஸ்-2 மாணவி. இவரை அரசு மருத்துவமனைக்கு உடல்நல பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மாணவியிடம் விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த அறிவரசன் மாணவியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து தாயார் அளித்த புகாரின்பேரில் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×