என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழி பகுதிகளில் பரவலாக மழை
    X

    சீர்காழி பகுதிகளில் பரவலாக மழை

    • ஒரு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
    • வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சீர்காழி:

    வளிமண்டலத்தில் நிலவும் வறண்ட நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மற்றும் கடலோர மாவட்டங்களில் காற்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளான சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, சட்டநாதபுரம், வைத்தீஸ்வரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.

    தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக நிலவி வந்த நிலையில் இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×