search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    செல்போனில் பேசியவரிடம் பணத்தை பறிகொடுத்த பெண்; மீட்டு ஒப்படைத்த போலீசார்
    X

    மீட்ட பணத்தை கீர்த்தனாவிடம் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஒப்படைத்தார்.

    செல்போனில் பேசியவரிடம் பணத்தை பறிகொடுத்த பெண்; மீட்டு ஒப்படைத்த போலீசார்

    • நான்கு தவணைகளாக ரூ. 34,000 பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார்.
    • மோசடியில் ஈடுபட்ட நபர் விரைவில் கைது செய்யப்படுவார்.

    நாகப்பட்டினம்:

    கீழ்வேளூர் மெயின் ரோடு பட்டமங்கலம் மனோகர் மகள் கீர்த்தனா (வயது 22).

    இவர் தனது செல்போன் எண்ணிற்கு அடையாளம் தெரியாத நபர்கள் உறவினர்கள் போல் பேசி அவசரமாக பணம் உதவி தேவைப்படுகிறது எனக்கூறி கூகுள் பே மூலம் நான்கு தவணைகளாக ரூ.34,000 பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார்.

    அதன் அடிப்படையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் விசாரணை செய்ய உத்தரவிட்டார். சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திருக்–குமரன், தலைமை காவலர் முருகதாஸ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு குற்றவாளியின் வங்கி கணக்கினை முடக்கி ரூ.34,000 பணத்தினை மீட்டனர்.

    மீட்ட பணத்தை கீர்த்தனாவிடம் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஒப்படைத்தார்.

    மேலும் இந்த மோசடியில் ஈடுபட்ட நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×