search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளர்களுக்கு தேசிய கொடி வழங்க வேண்டும்
    X

    தொழிலாளர்களுக்கு தேசிய கொடி வழங்க வேண்டும்

    • சுதந்திரத்திருநாள் ‘அமுதப்பெருவிழா’வை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) முதல் 15-ந்தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி என்ற இயக்கம் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளதாக அரசு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழிற்சாலை நிர்வாகிகளும், தங்களது தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேசிய க்கொடிகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் (பொறுப்பு) சபீனா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திரத்திருநாள் 'அமுதப்பெருவிழா'வை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) முதல் 15-ந்தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி என்ற இயக்கம் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளதாக அரசு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அதில் அனைத்து தொழிற்சாணலை களிலும் நிர்வாகத்தினர் கொடியேற்றுவது மட்டுமின்றி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வீடுகளிலும் கொடியேற்ற ஏதுவாக தேசிய க்கொடிகளை வழங்கி ஊக்குவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழிற்சாலை நிர்வாகிகளும், தங்களது தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேசிய க்கொடிகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.மேலும் தொழிற்சாலை நிறுவனங்கள் சுதந்திரத்திருநாள் 'அமுதப்பெ ருவிழா' கொண்டாடப்பட்ட விவரங்களை, மாவட்ட வாரியாக போட்டோக்களுடன் கூடிய அறிக்கையை சேலம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×