என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கடையநல்லூரில் உலக யோகா தினத்தை முன்னிட்டு முதியவர் தீபம் மூலம் யோகாசனம் கடையநல்லூரில் உலக யோகா தினத்தை முன்னிட்டு முதியவர் தீபம் மூலம் யோகாசனம்](https://media.maalaimalar.com/h-upload/2022/06/21/1716277-02kadayanallur-21-2.jpg)
X
கடையநல்லூரில் உலக யோகா தினத்தை முன்னிட்டு முதியவர் தீபம் மூலம் யோகாசனம்
By
மாலை மலர்21 Jun 2022 2:46 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இந்திய வரைபடத்தின் நடுவில் படுத்து தனது கை, கால், தலையில் அகல்விளக்கில் தீபம் ஏற்றி யோகாசனம் செய்தார்.
- கொரோனா மீண்டும் வராமல் தடுப்பதற்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை முகம்மது ஹபீபு வழியுறுத்தினார்.
கடையநல்லூர்
கடையநல்லூரில் உலக யோகாசன தினத்தை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், உலக அமைதிக்காகவும் கொரோனா மீண்டும் வராமல் தடுப்பதற்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தியும் இந்திய வரைபடத்தின் நடுவில் தீபம் மூலம் யோகாசனம் நடந்தது.
உலகம் முழுவதும் இன்று உலக யோகாசன தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கடையநல்லூரில் இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளரும், ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் முன்னாள் தலைவருமான முதியவர் முகம்மது ஹபீபு நேற்று இந்திய வரைபடத்தின் நடுவில் படுத்து தனது கை, கால், தலையில் அகல்விளக்கில் தீபம் ஏற்றி கொரோனா மீண்டும் வராமல் தடுப்பதற்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தியும், உலக நன்மைக்காக சிறப்பு யோகாசனங்களை செய்து காண்பித்தார்.
Next Story
×
X