search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
    X

    சங்கரன்கோவில் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

    • வைரமுத்து 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலிவேலைக்கு சென்று வந்தார்.
    • விஷம் குடித்த வைரமுத்து தனது நண்பர்களுக்கு போனில் தகவல் தெரிவித்தார்.

    நெல்லை:

    சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் அருகே உள்ள உமையதலைவன்பட்டி கீழதெருவை சேர்ந்தவர் வேல்சாமி. இவரது மகன் வைரமுத்து(வயது 22). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலிவேலைக்கு சென்று வந்தார்.

    கடந்த 11-ந்தேதி மாலை அப்பகுதியில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் அவர் விஷம் குடித்தார். அதன்பின்னர் அவர் தனது நண்பர்களுக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் அங்கு விரைந்து சென்று வைரமுத்து உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக வைரமுத்து உப்புச்சத்து நோயினால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×