என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
- பி சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் குடும்பத்துடன் காரில் சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
- அதே கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் கண்ணன் என்பவர் குடிபோதையில் காரின் முன்பு பட்டாசு வெடித்துள்ளார்.
புதியம்புத்தூர்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பி சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். (வயது 28) குடும்பத்துடன் காரில் சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே கார் வந்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் கண்ணன் (28) என்பவர் குடிபோதையில் காரின் முன்பு பட்டாசு வெடித்துள்ளார். இதை அருண்குமார் கண்டித்துள்ளார்.
உடனே அருண்குமாரின் வீட்டுக்கு சென்ற சந்தோஷ் கண்ணன் அருண்குமாரின் தாயார் இந்திராவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஓட்டப்பிடாரம் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இயைடுத்து வழக்குப் பதிவு செய்து போலீசார் சந்தோஷ் கண்ணனை கைது செய்தனர்.
Next Story






