என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
காரைக்காலில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற வாலிபர் கைது
- காரைக்கால் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி விற்ற வாலிபரை, நகர போலீசார் கைது செய்தனர்,
- அவரிடமிருந்து, ஒரு செல்போன், ரூ.2230 ரொக்கம் மற்றும் 3 எண் துண்டு சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி:
காரைக்கால் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி விற்ற வாலிபரை, நகர போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து, ஒரு செல்போன், ரூ.2230 ரொக்கம் மற்றும் 3 எண் துண்டு சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்கால் நகர போலீஸ் நிலைய சப்.இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மாலை, காரைக்கால் ஒப்பிலா ர்மணியர் கோவில் குளத்து மேடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, போலீசாரை பா ர்த்ததும், அங்கு நின்றிருந்த ஐயப்பன்(வயது30) என்பவர் ஓடத்துவங்கினார். போலீசார் அவரை விரட்டி பிடித்து சோதனை செய்தபோது, சட்டை பாக்கெட்டில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்ரி சீட்டுகளை வைத்திருந்தார். அவரது செல்போனிலும், 3 எண் லாட்ரி சீட் எண்கள் இருந்தது. விசாரித்ததில், 3 எண் லாட்ரியை விற்றதை வாலிபர் ஒப்புகொண்டார். தொடர்ந்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்து ஒரு செல்போன், ரூ.2230 ரொக்கம் மற்றும் 3 எண் துண்டு சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்