என் மலர்
உள்ளூர் செய்திகள்

முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கோப்புகளை திருச்சி மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் மண்டல ஐ.ஜி. ஆய்வு
- முத்துப்பேட்டையில் திருச்சி மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.
- விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டைக்கு திருச்சி மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் வருகை தந்தார்.
பின்னர் வருடாவருடம் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கும் ஜாம்புவா னோடை சிவன்கோவில், பின்னர் ஊர்வலம் செல்லும் பாதையான தர்கா, சிவராமன் ஸ்தூபி, பதற்றம் நிறைந்த ஆசாத்நகர், திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பஸ் நிலையம், புது பள்ளிவாசல், கொய்யா முக்கம், பங்களா வாசல், ஓடக்கரை, பட்டுக்கோட்டை சாலை, செம்படவன்காடு, சிலை கரைக்கும் பாமணி ஆற்று படித்துறை ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் லகூன் செல்லும் பாதை, மற்றும் படகுத்துறை ஆகியவைகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையம் வந்து அங்கு ஆய்வு செய்து அங்கிருந்த கோப்புகளையும் ஆய்வு நடத்தினார்.
அப்போது தஞ்சை சரக டி.ஐ.ஜி ஜெயசந்திரன், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.






