search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ஆண் நண்பனை மரத்தில் கட்டிவைத்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்.. நள்ளிரவில் நடந்த கொடூரம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஆண் நண்பனை மரத்தில் கட்டிவைத்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்.. நள்ளிரவில் நடந்த கொடூரம்

    • ஆண் நண்பனை சட்டைத் துணியாலும் பெல்டாலும் மரத்தில் கட்டி வைத்துள்ளனர்
    • இருவரின் பென்சிலால் வரைந்த புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் 21 வயது இளம்பெண் 3 நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈவென்ட் மேனேஜ்மேண்ட் படித்துவந்த 21 வயது பெண்ணையும் அவரது ஆண் நண்பனையும் அன்றைய தினம் போப்தேவ் காட் பகுதியில் வைத்து 3 பேர் கொண்ட கும்பல் சூழ்ந்தது.

    ஆண் நண்பனை சட்டைத் துணியாலும் பெல்டாலும் மரத்தில் கட்டி வைத்துவிட்டு மூவரும் சேர்ந்து பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இரவு 11 மணிக்கு இந்த சம்பவம் நடந்த நிலையில் அடுத்தநாள் [நேற்று] காலை 5 மணியளவில் அப்பெண் போலீசிடம் நடந்ததை கூறியுள்ளார்.

    இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றாவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மூவரில் இருவரின் பென்சிலால் வரைந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள போலீசார் அவர்களை பார்த்தால் தகவல் தெரிவிக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×