search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    தேர்தலை முன்னிட்டு?.. பாலியல் குற்றவாளி சாமியாருக்கு பரோல்! பின்னணியில் பாஜக - காங்கிரஸ் தாக்கு
    X

    தேர்தலை முன்னிட்டு?.. பாலியல் குற்றவாளி சாமியாருக்கு பரோல்! பின்னணியில் பாஜக - காங்கிரஸ் தாக்கு

    • தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்குப் பின் ராம் ரஹீமுக்கு 20 நாள் பரோல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • இதன் பின்னணியில் பாஜக உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

    அரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம், பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார் . இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 13 அன்று 21 நாள் பரோலில் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைக் காரணம் காட்டி வெளியே வந்த ராம் ரஹீம் மீண்டும் 20 நாள் பரோல் நீட்டிப்பு கோரி மீண்டும் விண்ணப்பித்திருந்தார்.

    அரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் தனக்கென அதிக பக்தர்களை உருவாக்கி வைத்துள்ள குர்மீத் பரோலில் வெளிவரும் காலகட்டங்கள் சரியாக உள்ளூர் அல்லது மாநில தேர்தல் சமயங்களாகவே இருந்துள்ளது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி அரியானா தேர்தல் நடக்க உள்ள நிலையில் ராம் ரஹீமின் பரோல் நீட்டிப்பு கோரிக்கை அரசியல் ரீதியாக விமர்சனங்களை ஏற்படுத்தியது.

    ராம் ரஹீமின் தற்போதைய பரோல் நீட்டிப்பு கோரிக்கை மனுவை ஹரியானா அரசு தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பியது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்குப் பின் ராம் ரஹீமுக்கு 20 நாள் பரோல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ராம் ரஹீமிற்கு அரசியல் உள்நோக்கத்துடன் பரோல் வழங்கப்பட்டுள்ளதாகவும் , இதன் பின்னணியில் பாஜக உள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் கடும் நிபந்தனைகளுடனேயே பரோல் வழங்கியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    அவரின் 20 ஆண்டுகள் தண்டனைக் காலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 15வது முறையாக தற்போது பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தனது தண்டனைக்கிடையில் 255 நாட்கள் பரோல் விடுப்பில் சுதந்திரமாக வெளியே இருந்துள்ளார் சாமியார் ராம் ரஹீம்.

    Next Story
    ×