search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகாரில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் திடீர் போராட்டம்- போலீஸ் தடியடி
    X

    பீகாரில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் திடீர் போராட்டம்- போலீஸ் தடியடி

    • வேலையில்லாத 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் அரசு வாக்குறுதி அளித்துள்ளது
    • 7வது கட்ட ஆட்சேர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த ஆசிரியர்கள் இன்று திடீரென போராட்டத்தில் குதித்தனர்.

    பாட்னா:

    பீகாரின் பாட்னா நகரில், ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அரசை கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.

    போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

    வேலையில்லாத 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வாக்குறுதி அளித்து, இதுவரை 6 கட்டங்களாக ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டுளள்து. 7வது கட்ட ஆட்சேர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த ஆசிரியர்கள் இன்று திடீரென போராட்டத்தில் குதித்தனர். 7வது கட்ட ஆட்சேர்ப்பின் கீழ், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் உயர்நிலை வகுப்பு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×