search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    டெல்லி அரசை கலைக்க ஜனாதிபதிக்கு பாஜக கடிதம்.. அவர்களின் ஒரே வேலை அதுதான் - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
    X

    டெல்லி அரசை கலைக்க ஜனாதிபதிக்கு பாஜக கடிதம்.. அவர்களின் ஒரே வேலை அதுதான் - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

    • அரசைக் கலைக்கக் கோரி பாஜக எம்.எல்.ஏக்கள் எழுதிய கடித்தத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளார்.
    • நாளையே கூட தேர்தல் அறிவித்தாலும் நாங்கள் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது

    டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசைக் கலைக்கக் கோரி பாஜக எம்.எல்.ஏக்கள் எழுதிய கடித்தத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கிலும் கலால் கொள்கை வழக்கிலும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜாமீன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் டெல்லி அரசின் நிர்வாக பணிகளில் தாமதம் ஏற்படுவதாகவும் சட்டம் சார்ந்த பிரச்சனைகள் உள்ளதாகவும் கூறி டெல்லி அரசை கலைக்க பாஜக எம்.எல்.ஏக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் பாஜகவின் ஒரே குறிக்கோள் அரசை கவிழ்ப்பதுதான் என்று ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி விமர்சித்துள்ளார்.

    'டெல்லியில் அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் பாஜக ஏற்கனவே தனது தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டது. எனவே தேர்தலில் வெல்ல காவி கட்சி செய்யும் சதிதான் இது. தேர்தலில் ஒரு சீட் கூட கிடைக்கப்போவதில்லை என்று தெரிந்த உடனே இந்த சதி வலையை பாஜக பின்னியுள்ளது. அரசை கவிழ்த்து அடுத்த தேர்தல் வரை ஜானதிபதி ஆட்சியை அமல்படுத்தச் செய்வதே அவர்களின் திட்டம்' என்று அதஷி விமர்சித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து பேசிய ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங், நாங்கள் தேர்தலுக்குத் தயாராக இருக்கிறோம், பாஜக சீக்கிரமே தோற்க வேண்டும் என்று நினைகிறது போலும், எனவே நாளையே கூட தேர்தல் அறிவித்தாலும் நாங்கள் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×