search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சி.பி.எஸ்.இ அங்கீகாரம்- மாநில அரசுகளின் அதிகாரம் பறிப்பு
    X

    சி.பி.எஸ்.இ அங்கீகாரம்- மாநில அரசுகளின் அதிகாரம் பறிப்பு

    • சிபிஎஸ்இ அங்கீகாரம் கோரி நேரடியாக மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம்.
    • ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும்.

    தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்கும் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துள்ளது.

    அதன்படி, தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறையில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது.

    தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற, மாநில அரசின் தடையில்லா சான்றை முதலில் பெற தேவையில்லை என்பது புதிய நடைமுறை ஆகும்.

    அங்கீகாரம் கோரி நேரடியாக மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    பிறகு, விண்ணப்பம் செய்யும் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பதில் ஆட்சேபம் உள்ளதா ? என மாநில கல்வித்துறையிடம் மத்திய அரசு கருத்து கேட்கும்.

    ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    Next Story
    ×