search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறோம்: ஆனால் என எச்சரிக்கும் சிராக் பஸ்வான்
    X

    நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறோம்: ஆனால் என எச்சரிக்கும் சிராக் பஸ்வான்

    • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவு.
    • பொது சிவில் சட்டம் தொடர்பான வரைவை பார்க்கும் வரை கருத்து கூற இயலாது.

    பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகள் நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன. பீகார் மாநிலம் தன்னிச்சையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது.

    காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் மத்தியில் ஆட்சியை பிடித்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தது. ஆனால் பாஜக-வுக்கு சாதிவாரி கணக்கெடுப்பில் உடன்பாடு இல்லை.

    தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக வலியுறுத்தும்போதெல்லாம், மத்திய அரசு அதை செய்ய வேண்டும் என திமுக அரசு வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள மத்திய மந்திரி சிராக் பஸ்வான் சாதிவாதி கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்புக்கு எங்கள் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. ஆனால், அதன் புள்ளி விவரங்களை பொது வெளியில் தெரிவித்தால் சமூகத்தில் பிளவை ஏற்படுத்த வழிவகுக்கும்.

    பாஜக தேர்தல் அறிக்கையில் ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் (UCC) ஆகியவை கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை ஏதும் நடத்தவில்லை.

    பொது சிவில் சட்டம் தொடர்பான வரைவு இன்னும் வெளியிடப்படவில்லை. அதற்கு முன்னதாக அதுகுறித்து ஒரு முடிவு எடுக்க முடியாது. அதேவேளையில் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) நாடு முழுவதும் ஒரே தேர்தல், அதாவது ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை முழுமையாக ஆதரிக்கும்.

    இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. நாட்டின் ஒவ்வொரு பிராந்தியங்களின் மொழி, கலாச்சாரம் அல்லது வாழ்க்கை முறை உள்ளிட்ட எல்லாம் மாறுபட்டவை. எல்லோரையும் ஒரே புள்ளியில் எப்படி கொண்டு வர முடியும் என்பதை குறித்து வியக்கிறேன்.

    இது இந்து- முஸ்லிம் குறித்து விவாதிக்கப்படுகிறது. ஆனால் இந்துக்களில் பாரம்பரியம், திருமணம் உள்ளிட்டவை நாடுகளில் மாறுபட்டவையாக உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் இதில் இருந்து விலக்கு பெறுவார்கள் என நினைக்கிறேன். அதனால் அவர்களை நீங்கள் எப்படி ஒரே குடைக்குள் கொண்டு வர முடியும்?. ஆகவே வரைவு வரும்வரை, இந்த கேள்விக்கு தன்னிடம் பதில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இது இந்து- முஸ்லிம் பிரிவினை பற்றியது அல்ல. இது அனைவரையும் ஒன்றிணைப்பது பற்றியது என சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×