search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    மணிப்பூர் பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கிய கட்சிகள்
    X

    மணிப்பூர் பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கிய கட்சிகள்

    • மணிப்பூர் பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை
    • இன்று வெளியான வீடியோ இதன் நோக்கத்தை இன்னும் அதிகரித்துள்ளது

    இந்திய பாராளுமன்றம் பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. மணிப்பூர் வன்முறை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப ஆயத்தம் ஆகியுள்ளது.

    இந்த நிலையில் நின்று மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்து செல்லப்படும் காட்சி இதயத்தை நொறுங்கச் செய்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குள்ளாகி வரும் நிலையில், பாராளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.

    இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பல்வேறு கட்சிகள் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம.பி. எலராமன் கரீம், காங்கிரஸ் எம்பி. இம்ரான் பிரதாப்கார்கி, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

    Next Story
    ×