என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஒற்றுமை பாதயாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர் திடீர் மரணம் - ராகுல் காந்தி இரங்கல்
- கிருஷ்ணகுமார் பாண்டே மரணத்திற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
- இது பாரத் ஜோடோ யாத்ரீகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்திவருகிறார். இந்த யாத்திரையின் 62-வது நாளில் யாத்திரையின்போது காங்கிரஸ் மூத்தத் தலைவர் கிருஷ்ணகுமார் பாண்டேவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார். இது பாரத் ஜோடோ யாத்ரீகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கிருஷ்ண குமார் பாண்டே மராட்டிய மாநில காங்கிரசின் சேவா தள பொதுச்செயலாளர் ஆவார்.
இந்நிலையில், கிருஷ்ணகுமார் பாண்டே மரணத்திற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். கடைசி நிமிடம் வரை பாண்டே தேசியக் கொடியை கையில் பிடித்துக்கொண்டிருந்தார் என ராகுல்காந்தி கூறினார்.
மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல் மந்திரி அசோக் சவானும் பாண்டேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்