search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒற்றுமை பாதயாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர் திடீர் மரணம் - ராகுல் காந்தி இரங்கல்
    X

    ராகுல் காந்தி

    ஒற்றுமை பாதயாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர் திடீர் மரணம் - ராகுல் காந்தி இரங்கல்

    • கிருஷ்ணகுமார் பாண்டே மரணத்திற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • இது பாரத் ஜோடோ யாத்ரீகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பை:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்திவருகிறார். இந்த யாத்திரையின் 62-வது நாளில் யாத்திரையின்போது காங்கிரஸ் மூத்தத் தலைவர் கிருஷ்ணகுமார் பாண்டேவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.

    இதையடுத்து நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார். இது பாரத் ஜோடோ யாத்ரீகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    கிருஷ்ண குமார் பாண்டே மராட்டிய மாநில காங்கிரசின் சேவா தள பொதுச்செயலாளர் ஆவார்.

    இந்நிலையில், கிருஷ்ணகுமார் பாண்டே மரணத்திற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். கடைசி நிமிடம் வரை பாண்டே தேசியக் கொடியை கையில் பிடித்துக்கொண்டிருந்தார் என ராகுல்காந்தி கூறினார்.

    மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல் மந்திரி அசோக் சவானும் பாண்டேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×