search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    தலித் கார்டை வைத்து காங்கிரஸ் விளையாடுகிறது: சிராக் பஸ்வான் சாடல்
    X

    "தலித்" கார்டை வைத்து காங்கிரஸ் விளையாடுகிறது: சிராக் பஸ்வான் சாடல்

    • சபாநாயகர் பதவிக்கு வேட்பாளரை நிறுத்தியுள்ளது காங்கிரஸ்.
    • தோல்வி உறுதி என தெரிந்த போதிலும் இதுபோன்று தலித் தலைவர்களை வேட்பாளராக நிறுத்துகிறது என குற்றச்சாட்டு.

    மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சி கூட்டணிக்கு விட்டுக்கொடுக்க பாஜக மறுக்கிறது. இதனால் சபாநாயகர் பதவியில் போட்டியிடப் போவதாக அறிவித்து வேடபாளரையும் அறிவித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த கே. சுரேஷை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தோல்வி உறுதியாகும் போதெல்லாம் தலித் கார்டை வைத்து விளையாடுகிறது என சிராக் பஸ்வான் விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக சிராக் பஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

    2002-ம் ஆண்டு நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என காங்கிரஸ் கூட்டணிக்கு தெரியும். அப்படி இருந்தும் தலித் தலைவரான சுஷில் குமார் ஷிண்டேவை நிறுத்தியது.

    2017-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் என்டிஏ கூட்டணி ராம்நாத் கோவிந்தை நிறுத்தியது. அவருக்கு போதுமான அளவிலான எண்ணிக்கையில் ஆதரவு இருந்த போதிலும் தலித் சமுதாயத்தை சேர்ந்த மீரா குமாரை நிறுத்தியது.

    தற்போது மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட போதுமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாத நிலையில், தலித் தலைவரான கே.சுரேஷை நிறுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு தலித் தலைவர்கள் வெறும் அடையாள வேட்பாளர்கள்தானா?.

    இவ்வாறு சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

    தானும் தலித் சமுதாயத்தில் இருந்து வந்தவன்தான் என கூறிக்கொண்டு மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×