என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி: மளிகை கடை வியாபாரிகளை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்த ராகுல்காந்தி
    X

    டெல்லி: மளிகை கடை வியாபாரிகளை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்த ராகுல்காந்தி

    • மளிகைக் கடைகள் என்பது பொருட்களை விற்கும் கடை மட்டுமல்ல.
    • ஆயிரக்கணக்கான மளிகைக் கடைகள் தற்போது மூடப்படுகின்றன.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவ்வப்போது பொதுமக்களையும் வியாபாரிகளையும் சந்தித்து பேசி வருகிறார்.

    அதன்படி டெல்லியில் உள்ள மளிகை கடை வியாபாரிகளை சந்தித்து அவர்களது குறைகளை ராகுல்காந்தி கேட்டறிந்தார்.

    இது தொடர்பான விடியோவை ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "சமீபத்தில் டெல்லியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு சென்றேன். மளிகைக் கடைகள் என்பது பொருட்களை விற்கும் கடை மட்டுமல்ல. அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் உணர்வுப்பூர்வமான தொடர்புகளைக் கொண்டுள்ளனர், ஆனால் வர்த்தக வணிகத்தின் விரைவான வளர்ச்சியின் காரணமாக, ஆயிரக்கணக்கான மளிகைக் கடைகள் தற்போது மூடப்படுகின்றன. இது கவலையளிக்கிறது.

    தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை நாம் ஊக்குவிக்கும் அதே சமயம் அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு பாதுகாப்பையும் வழங்க வேண்டும். நமது பொருளாதாரம் மாற்றமடைந்து, உலகப் போக்குகளுக்கு ஏற்ப நாம் முன்னேறும்போது, சிறு வணிகர்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×