search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    2 கோடி பேரிடம் தலா ரூ.100 கேட்கும் பிரசாந்த் கிஷோர்- காரணம் தெரியுமா?
    X

    2 கோடி பேரிடம் தலா ரூ.100 கேட்கும் பிரசாந்த் கிஷோர்- காரணம் தெரியுமா?

    • பிரசாந்த் கிஷோர், ஜன சுராஜ் என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார்.
    • மற்ற கட்சிகளைப் போல், கள்ளச்சாராயம், மணல் குவாரி ஆகிய வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள மாபியாக்களிடம் நாங்கள் நன்கொடையை எதிர்பார்க்கவில்லை.

    பாட்னா:

    தேர்தல் வியூக நிபுணராக இருந்த பிரசாந்த் கிஷோர், ஜன சுராஜ் என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். அடுத்த ஆண்டு நடக்கும் பீகார் சட்டசபை தேர்தலில் அக்கட்சி போட்டியிடுகிறது.

    இந்நிலையில், தனது கட்சிக்கான நிதி தேவை குறித்து பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:-

    மற்ற கட்சிகளைப் போல், கள்ளச்சாராயம், மணல் குவாரி ஆகிய வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள மாபியாக்களிடம் நாங்கள் நன்கொடையை எதிர்பார்க்கவில்லை.

    பொதுமக்களிடம் நன்கொடை கேட்போம். பீகார் முழுவதும் 2 கோடி பேர் தலா ரூ.100 வீதம் நன்கொடை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வோம். மக்களும் ஏற்றுக்கொள்வார்கள். இந்த விதத்தில் ரூ.200 கோடி எளிதாக திரட்டலாம். தேர்தல் நெருங்கும்போது இன்னும் அதிகமாக கூட கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×