search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரசில் இணைந்த சுயேட்சை வேட்பாளர்: இந்தியா கூட்டணியின் எண்ணிக்கை 233 ஆக உயர்வு
    X

    காங்கிரசில் இணைந்த சுயேட்சை வேட்பாளர்: இந்தியா கூட்டணியின் எண்ணிக்கை 233 ஆக உயர்வு

    • சுயேட்சை வேட்பாளரான விஷால் பாட்டில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
    • மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

    மகாராஷ்டிராவின் சங்லி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட விஷால் பாட்டில் பாஜக வேட்பாளர் சஞ்சய்காகா பாட்டீலை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

    மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி 30 இடங்களையும் பாஜக கூட்டணி 17 இடங்களையும் வென்றுள்ளது.

    இந்நிலையில் மகாராஷ்டிராவில் வெற்றி பெற்ற ஒரே ஒரு சுயேட்சை வேட்பாளரான விஷால் பாட்டில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

    இதன் மூலம் மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

    மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் வசந்ததாதா பாட்டீல் குடும்பத்தை சேர்ந்தவர் தான் இந்த விஷால் பாட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×