search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    வெடிகுண்டு மிரட்டல் புரளிகளால் ரூ.80 கோடி வரை இழப்பு- விமான நிறுவனங்கள்
    X

    வெடிகுண்டு மிரட்டல் புரளிகளால் ரூ.80 கோடி வரை இழப்பு- விமான நிறுவனங்கள்

    • விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்கள் உள்பட 12 விமானங்களக்கு வெடிகுண்டு மிரட்டல்.
    • நேற்று மட்டும் 32 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    நாடு முழுவதும் விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்கள் உள்பட 12 விமானங்களக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, டெல்லி- பிராங்பேர்ட், சிங்கப்பூர்- மும்பை, பாலி- டெல்லி, சிங்கப்பூர்- புனே உள்ளிட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், இண்டிகோ நிறுவனத்தின் புனே- ஜோத்பூர், கோவா- அகமதாபாத், கோழிக்கோடு- சவுதி உள்ளிட்ட விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் புரளிகளால் சுமார் ரூ.80 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

    நேற்று மட்டும் 32 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×