search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாநிலத்தின் பொருளாதாரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ம.பி. காங்கிரஸ் தலைவர்
    X

    மாநிலத்தின் பொருளாதாரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ம.பி. காங்கிரஸ் தலைவர்

    • மாநிலத்தின் மோசமான நிதியை நிலையை சுட்டிக்காட்டி மத்திய பிரதேச மாநிலத்திற்கு ஆர்பிஐ கடன் வழங்க மறுத்துவிட்டது.
    • மோகன் யாதவ் தலைமையிலான 160 நாட்கள் ஆட்சியின் பொருளாதார நிலை குறித்து வெள்ளை அறிக்க வெளியிட நாங்கள் விரும்புகிறோம்.

    மத்திய பிரதேச மாநிலத்தின் பொருளாதாரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பா.ஜனதா முதல்வர் மோகன் யாதவிடம் அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஜித்து பத்வாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "மாநிலத்தின் மோசமான நிதியை நிலையை சுட்டிக்காட்டி மத்திய பிரதேச மாநிலத்திற்கு ஆர்பிஐ கடன் வழங்க மறுத்துவிட்டது. மோகன் யாதவ் தலைமையிலான 160 நாட்கள் ஆட்சியின் பொருளாதார நிலை குறித்து வெள்ளை அறிக்க வெளியிட நாங்கள் விரும்புகிறோம். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள்.

    பெண்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை, ரூ.450-க்கு சமையல் எரிவாயு போன்ற வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசு ஆடம்பரமாக பணத்தைச் செலவு செய்கிறது. மாநிலத்தின் கஜானா காலியாக இருந்த நிலையில், பாஜக அரசு விமானம் வாங்க திட்டமிட்டு, அமைச்சர்களின் வீடுகளை அலங்கரிப்பதற்கும், அவர்களுக்கு விலை உயர்ந்த வாகனங்கள் வாங்குவதற்கும் பணம் செலவழிக்கிறது" என்றார்.

    Next Story
    ×