search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    மருமகளை திருமணம் செய்த மாமியார்
    X

    மருமகளை திருமணம் செய்த மாமியார்

    • கணவரை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டோம்.
    • கலியுகத்தின் அறிகுறி என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    மாமியார் மருமகள் என்றாலே எப்போதுமே எதிர் எதிர் துருவங்களாக இருப்பது தான் வழக்கம். இதற்கு மாறாக மாமியார் மருமகள் இருவரும் தங்களுடைய எல்லையைத் தாண்டி ஓரின சேர்க்கை திருமணம் செய்துள்ளனர்.

    பீகார் மாநிலம் கோபால் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பெல்வா கிராமத்தைச் சேர்ந்த நடுத்தர வயது பெண் சுமன். இவருடைய சொந்த மருமகள் ஷோபா. கடந்த 3 ஆண்டுகளாக மாமியார் சுமனுக்கு மருமகள் சோபா மீது காதல் ஏற்பட்டது. இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் ரீதியாக நெருக்கமாக இருந்தனர்.

    இது இவர்களின் கணவர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கண்டித்தனர். இதனால் மாமியார் மருமகள் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இருவரும் அங்குள்ள ஒரு கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

    அப்போது மாமியார் சுமன் பேண்ட் சட்டை அணிந்து மணமகன் போல காட்சி அளித்தார். மருமகள் சோபாவுக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோவிலில் இருவரும் மாலை மாற்றினர். பின்னர் மாமியார் சுமன் மருமகள் கழுத்தில் தாலி கட்டினார். அவரது நெற்றியில் குங்குமம் வைத்தார். இருவரும் புதுமண தம்பதிகளாக அங்குள்ள நெருப்பை சுற்றி வந்து அக்னிசாட்சியாக நாங்கள் எப்போதும் ஒன்றாக இருப்போம் என உறுதி ஏற்றனர்.

    மருமகளை திருமணம் செய்து கொண்ட மாமியார் கூறுகையில்:-

    நான் எனது மருமகளை வெறித்தனமாக காதலிக்கிறேன். அவள் வேறொருவரை திருமணம் செய்து கொண்டதை என்னால் தாங்க முடியவில்லை.

    உலகம் என்ன நினைக்கும் என்பதை பற்றி கவலைப்படாமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு திருமணம் செய்து கொள்ள எங்களது மனம் தூண்டியது.

    கணவரை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் எப்போதும் பிரிய மாட்டோம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் தம்பதியினர் தாங்கள் திருமணம் செய்து கொண்ட வீடியோவை அவர்களுடைய குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மாமியார் மருமகள் திருமணம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் சூடான விவாதத்தை தூண்டி உள்ளது.

    சிலர் அவர்களின் முடிவை ஆதரித்தும் பலர் இது இயற்கைக்கு மாறான விதி மீறல். கலியுகத்தின் அறிகுறி என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    மாமியார் மருமகள் திருமணம் செய்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×