search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் பரிசு
    X

    லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் பரிசு

    • அன்மோல் பிஷ்னோய் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும்.
    • அன்மோல் பிஷ்னோய் மீது 2022ம் ஆண்டில் 2 குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. தாக்கல் செய்தது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிராவில் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் முக்கிய தலைவர் பாபா சித்திக் கடந்த அக்டோபர் 12 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் ரவுடி கும்பல் பொறுப்பேற்றது.

    எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது குஜராத் சபர்மதி சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளே இருந்தவாறே குற்றச்செயல்களை அரங்கேற்றி வருகிறார்.

    இந்நிலையில், பல்வேறு வழக்குகளில் என்.ஐ.ஏ.வால் தேடப்பட்டு வரும் குற்றவாளியும், லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரருமான அன்மோல் பிஷ்னோய் குறித்த தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது.

    அன்மோல் பிஷ்னோய் மீது 2022ம் ஆண்டில் 2 குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. தாக்கல் செய்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகவும் அன்மோல் தேடப்பட்டு வருகிறார்.

    Next Story
    ×